மருத்துவ மேற்படிப்பில், வருகைப் பதிவு குறைவாக உள்ளதால், டாக்டர்கள் தேர்வு எழுத, மதுரை ஐகோர்ட் அனுமதி மறுத்து விட்டது. நாகர்கோவில், பெருவிளை ராஜசேகர், மனைவி லிடியா; இருவரும் டாக்டர்கள். அரசின் முன் அனுமதியுடன் குலசேகரம், தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பில் சேர்ந்தனர்.
போதிய வருகைப் பதிவு இல்லாததால், மூன்றாம் ஆண்டு இறுதித் தேர்வு எழுத, கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: வருகைப் பதிவேட்டை பரிசீலித்த போது பெரிய அளவில் மாறுபாடு இல்லை என, உறுதியானது. மனுதாரர்கள் மூன்றாண்டு பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யவில்லை. மனுக்களை அனுமதித்தால் நீதிக்கு புறம்பானதாக அமையும். மாணவர்களின் பாதுகாப்பு, நலனுக்காக விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. விதிகள்படி 85 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும். அது மனுதாரர்களுக்கு இல்லை. மனுதாரர்களை இறுதித் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை