மானியம், கல்வி உதவித் தொகைகளை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையிலான பொது நிதி மேலாண்மைத் திட்டத்தில் இணைப்பு பெற்றுள்ளதை பல்கலைக்கழகங்கள் உறுதிப்படுத்துமாறு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
முறைகேடுகளைத் தடுக்கவும், உதவித் தொகைகள் முழுமையாகப் பயனாளிகளுக்குச் சென்றடையும் வகையிலும் மத்திய அரசு நேரடி மானியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே மானியத் தொகை செலுத்தப்பட்டு விடும்.
இதுபோல, பல்கலைக்கழக மானியக் குழுவும் கல்வி உதவித் தொகைகளை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கே அனுப்பி வருகிறது. இதற்காக பொது நிதி மேலாண்மைத் திட்டத்தை யுஜிசி அறிமுகம் செய்தது.
இப்போது கல்வி உதவித் தொகை மட்டுமல்லாமல், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு உதவித் தொகைகளையும் (மானியம்) இந்த பொது நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டுவர யுஜிசி முடிவு செய்துள்ளது.
இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
யுஜிசி-யிடம் மானியம் பெறும் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைப் பொது நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, பல்கலைக்கழகங்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்துள்ளதை வரும் 30-ஆம் தேதிக்குள் ன்ஞ்ஸ்ரீ.ல்ச்ம்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியில் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு இந்தத் திட்டத்தில் இணையாத பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு மானியங்கள் விடுவிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை