அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், தகவலறியும் உரிமை சட்டத்தை (ஆர்.டி.ஐ.,) செயல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.,) வலியுறுத்தி உள்ளது. மேலும், நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை, தினசரி அடிப்படையில் பராமரித்து, அவர்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதனால், கவனக்குறைவான சிகிச்சையால், நோயாளி பாதிக்கப்படும் போது, நோயாளியின் முந்தைய மருத்துவ அறிக்கைகளை, மருத்துவர்கள் திருத்தும் விரும்பத்தகாத நடைமுறை முடிவுக்கு வரும். இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என, சி.ஐ.சி., தெரிவித்துள்ளது.
போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, கைலாஷ் பிரசாத் சிங் என்பவர், கடந்த 2012ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இதையடுத்து, அவரது மகன் பிரபாத் குமார், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், தந்தையின் மருத்துவ அறிக்கைகளை தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரினார். ஆனால், அவரது கோரிக்கை மருத்துவமனை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள மத்திய தகவல் ஆணையம், ''மருத்துவ அறிக்கைகளை தர மறுத்துள்ளது, விரும்பத்தகாத முன்னுதாரணம். பெரும் பணத்தை செலவு செய்யும் நோயாளிகளுக்கு, அவரது மருத்துவ அறிக்கைகளை பெற உரிமை உள்ளது. தகவலறியும் உரிமை சட்டத்தின்படி, அரசு பொது மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளும், தேவையான தகவல்களை தர வேண்டியது அவசியம்'' என, தெரிவித்துள்ளது. எனவே, மனுதாரர் கோரிய அனைத்து அறிக்கைகளையும், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என, சி.ஐ.சி. ஆணையர் ஸ்ரீதர் ஆச்சர்யலு உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை