வங்கிகளின் தொடர் முறையால், தமிழகத்தில் உள்ள 15 லட்சம் அரசுஊழியர்களுக்கும் இந்த மாதம் 6-ந்தேதி தான் சம்பளம் கிடைக்க இருக்கிறது.
தொடர் விடுமுறை
2014-15-ம் நிதியாண்டு நேற்றுமுன்தினத்தோடு நிறைவடைந்தது. இதையடுத்து நிதியாண்டு கணக்கு வழக்குகள் முடிக்கப்பட்டு, அந்தந்த துறைகளின்சார்பில் மீதமுள்ள பணம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எப்போதும் அரசு ஊழியர்களுக்கு 1-ந்தேதியன்றே சம்பளப்பணம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால் இந்த மாதத்துக்கான சம்பளப்பணம் இன்னும் அரசு ஊழியர்களுக்கு அந்தந்த துறைகளின் சார்பில் பட்டுவாடா செய்யப்படவில்லை. ஏனெனில். 2014-15-ம் நிதியாண்டு கணக்கு முடிக்கப்பட்ட நிலையில் நேற்று வங்கிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்றும், புனித வெள்ளியை முன்னிட்டு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர 4-ந்தேதியும், 5-ந்தேதியும் அரசு விடுமுறை நாட்களாகும். ஆனால் வங்கிகள் ½ நாள் இயங்கும் என்பதால், அன்று அரசு தன் ஊழியர்களுக்குசம்பளப்பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றாலும், அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் 6-ந்தேதி (திங்கட்கிழமை) தான் சம்பளம் கிடைக்கும்.
15 லட்சம் ஊழியர்கள்
தமிழக அரசில் அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட 13 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். தவிர உள்ளாட்சி நிறுவன ஊழியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் உள்பட 2 லட்சம் பேர் உள்ளனர். ஆக மொத்தம் அரசு ஊழியர்களாக 15 லட்சம் பேர் பணியில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 6-ந்தேதி தான் சம்பளம் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை என்.ஜி.ஓ. சங்கத்தலைவர் சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
வங்கி கணக்குகள்
சென்னையில் இயங்கும் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் கூறியதாவது:-பொதுவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். ஆனால் நேற்று விடுமுறை என்பதாலும், அடுத்த 2 நாட்களும் தொடர் விடுமுறை என்பதாலும் இந்த மாதம் 4-ந்தேதி (சனிக்கிழமை) சம்பளம் பட்டுவாடா செய்யப்படும். தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பர்களுக்கு இன்று சம்பளம் செலுத்தப்பட்டு விடும். இதேபோல பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் 4-ந்தேதி சம்பளம் கிடைக்கும்.
கோரிக்கை
இதில் தபால் துறை ஊழியர்களுக்கு தங்கள் அலுவலகங்களிலேயே பணம் எடுத்துக்கொள்ள முடியும் என்பதால், அவர்களுக்கு வழக்கம்போல நேற்றே சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் ரெயில்வே, தபால்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் 1½ லட்சம் பேர் உள்ளனர். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க மாத கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை