பீகார் மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதி தேர்வில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இது குறித்து மாநில கல்வித்துறை அதிகாரி கூறியதாவது:
மாநிலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாநில ஐகோர்ட் உத்தரவு பிறப்பி்த்தது. இதனடிப்படையி்ல் ஆசிரியர்களுக்கு இருமுறை தேர்வு நடத்தப்பட்டது. முதல்முறை தோல்வியடைந்த போதிலும் இரண்டாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இரண்டுமுறையிலும் சுமார் 3 ஆசிரியர்கள் வரை தோல்வியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர் என தெரிவித்தார். மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் சுமார் 10 ஆயிரம் ஒப்பந்தபணி வகித்து வந்த ஆசிரியர்கள் தோல்வி கண்டனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை