Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே பாடநூல் விற்பனை

மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே பாடநூல் விற்பனை செய்யப்படும் என்று இயக்குனர் பிச்சை தெரிவித்துள்ளார். தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் பிச்சை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2015,16ம் கல்வி ஆண்டில் பிளஸ்2 பயில உள்ள மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவை கழகத்தால் அச்சிடப்பட்டு அந்தந்த வட்டார அலுவலகங்களில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மெட்ரிகுலேசன் மேல்நிலைலப் பள்ளி முதல்வர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டார அலுவலகத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பாடநூல்களுக்குண்டான தொகையினை வங்கி வரைவோலையாக செலுத்தி, விற்பணை பிரதியை பெற்றுக் கொள்ளவும், அதனை உடனடியாக மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளிலேயே பிளஸ் 2 பாட நூல்களை விற்பனை பிரதியாக பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement