'கோடை விடுமுறைக்குப் பின், ஜூன், 1ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் அறிவித்து உள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. ??ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 19ம் தேதி துவங்கி, கடந்த, 10ம் தேதி முடிந்தது.
மற்ற வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாத இறுதிக்குள் முடிகின்றன. பின், மே இறுதி வரை, கோடை விடுமுறை. இதன்பின், 2015 - 16ம் கல்வி ஆண்டு, வரும், ஜூன் 1ம் தேதி துவங்கும் எனவும், அன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் எனவும், பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிவிப்பு:
அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க, நடுநிலை பள்ளிகள், கோடை விடுமுறை முடிந்து, வரும், ஜூன் 1ம் தேதி, மீண்டும் திறக்கப்பட வேண்டும். 2015 - 16ம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டி, உரிய விவரங்களுடன், தனியாக அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார். கடந்த, 2012 - 13ம் கல்வி ஆண்டு, கோடை வெப்பம் காரணமாக, பள்ளி திறப்பது, ஜூன் 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு, கோடை வெப்பம் சுட்டெரிப்பதால், பள்ளி திறப்பது தள்ளிப்போகுமா என, பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், பள்ளி திறப்பு தேதியை, திட்டவட்டமாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை