தலித் (எஸ்.சி.) மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை உயர்த்தி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கல்வி உதவித் தொகைத் திட்டங்களை மத்திய அரசு யுஜிசி வாயிலாக செயல்படுத்தி வருகிறது. அண்மையில் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் அனைத்து வகை கல்வி உதவித் தொகைகளையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஆராய்ச்சியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பேராசிரியருக்கான உதவித் தொகை, பெண்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகை, தனி பெண் குழந்தையாக இருந்து ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்பவர்களுக்கான உதவித் தொகை ஆகியவை உயர்த்தப்பட்டன.
இதுபோல், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் இந்தப் பிரிவு மாணவர்களுக்கு, முன்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 16 ஆயிரம் வழங்கப்பட்டது, இனி ரூ. 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதுபோல் முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாதம் ரூ. 18 ஆயிரம் வழங்கப்பட்டது, இனி ரூ. 28 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை