மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு விதமான ஆவணங்களை கேட்கின்றன. ஆனால் பொதுவாக அனைத்து வங்கிகளும் கேட்கும் ஆவணங்கள், அரசு அதிகாரியின் சான்று பெற்ற (அட்டஸ்டட்) மாணவரது பிறப்பு சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ் விண்ணப்பிக்கும் மாணவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் மற்றும் அவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுபவரின் புகைப்படம். மதிப்பெண் சான்றிதழ் அல்லது முந்தைய கல்வி தகுதிக்கான சான்றிதழின் நகல்கள், மாணவரது பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தற்போதைய வருமான சான்றிதழ், வெளிநாட்டு படிப்பிற்கு விண்ணப்பித்திருப்பின், பாஸ்போர்ட் அல்லது விசா, விமான கட்டணத்திற்கான ரசீது போன்றவற்றை மாணவர் சமர்ப்பிக்க வேண்டும்.
இவை இல்லாமல் வங்கிகள் தங்களுக்கு என்று சில ஆவணங்களை குறிப்பாக கேட்க வாய்ப்பு உள்ளது. அதனையும் மாணவர்கள் அளிக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்கள் எந்த கல்வி நிறுவனத்தில் படிப்பது என்பதை தீர்மானிக்க வேண்டும். அங்கு செல்லும் செலவு, தங்கி படிக்கும் செலவு, கல்விக்கட்டணம், தடையில்லா சான்றிதழ் உட்பட பிற தகுதிகள் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தூதரக இணைய தளத்தில் சென்றும் நடைமுறை விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை