'அறிவியல் ஆய்வில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஜப்பான் செல்லும் வாய்ப்பு தேடி வரும்' என, அறிவியல் தொழில்நுட்ப மைய மண்டல திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் கோவை மண்டல திட்ட இயக்குனர் அழகிரி சாமிராஜ் கூறியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் ஆர்வம் அதிகம் இருந்தாலும், அவர்கள் பொருளாதார நிலையில் பின் தங்கியிருப்பதால், அவர்களின் ஆர்வம் ஊக்குவிக்கப்படுவதில்லை. அத்தகைய மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், புதிய அறிவியல் படைப்புகளை உருவாக்கும் மாணவ, மாணவியருக்கு 'இளம் விஞ்ஞானி' என்ற விருது வழங்கப்படுகிறது; இதற்கு 5,000 ரூபாய் பரிசும் வழங்கி அரசு ஊக்குவிக்கிறது. மாநிலம் முழுக்க ஆண்டுக்கு, 10 ஆயிரம் மாணவர்கள் இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வீதம், ஐந்து கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இளம் விஞ்ஞானிகளை தேர்வு செய்யும் போட்டி, மாவட்ட, மாநில அளவில் நடத்தப்படுகிறது. அதன் பிறகு, தேசிய அளவில் நடக்கும் போட்டிகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்களில் ஐந்து பேர், ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்; இந்த வாய்ப்பை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்; அவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு, அழகிரி சாமிராஜ் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை