அரசுப் பள்ளி தானே என்று ஏளனமாக பார்ப்பவர்கள், இதைப்படித்தால் ஆச்சரியப்படத் தான் வேண்டும்; மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக சொந்த பணத்தை செலவழித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மெனக்கெடுகின்றனர். மதுரை அருகே மேலுார் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் இந்த செயலைப் பார்த்து ஆசிரியர் சமூகம் 'காலரை' துாக்கி விட்டு பெருமைப்படலாம்.
இதுகுறித்து சண்முகப்பிரியா கூறியதாவது:-மாணவர்களுக்கு 'காம்பஸ்', பாகை மாணி, ஸ்கேல், பென்சில் உள்ளிட்ட உபகரணங்களை இலவசமாக கொடுத்து கற்பிக்கிறோம். விடுமுறை நாட்களில் பள்ளியில் இலவச மதிய உணவு கிடையாது; ஆசிரியைகளின் செலவில் உணவு கொடுக்கிறோம். மேலும் கேள்வித்தாள் (மெட்டீரியல்) நகல் கொடுத்து கற்பிக்கிறோம் என்றார்.ஜோனாமேரி கூறியதாவது: விடுமுறையில் மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருந்து விடுவர்; அவரவர் வீட்டிற்கு போனில் அழைத்து, சிறப்பு வகுப்பு எடுக்கிறோம். தவறாது கலந்து கொள்வோருக்கு பரிசு கொடுத்து ஊக்குவிக்கிறோம் என்றார்.
மாணவர்கள் கூறியதாவது:
பிரபாகரன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்ததால், அதில் கவனம் போய்விடும் என பயந்தேன். இதனால் வீட்டில் இருப்பதை விட பள்ளிக்கு வருவது உபயோகமாக இருந்தது.
ராஜ்குமார்:- வீட்டில் இருந்தால் நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவோம். பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்துவது படிப்பில் கவனம் செலுத்த உதவுகிறது.இவ்வாறு கூறினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை