சென்னை அருகே திரிசூலத்தில் கணிதத் தேர்வுக்குப் பயந்து பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திரிசூலம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் இன்பராணி (17), புழுதிவாக்கத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இன்பராணி இப்போது நடைபெற்று வரும் பிளஸ் 2- தேர்வை எழுதி வந்தார்.
இதையடுத்து, பெற்றோர் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பல்லாவரம் போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், இன்பராணி கணிதப் பாடத்தில் பின்தங்கியிருந்தார். இதனால் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் இன்பராணி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகம் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை