Ad Code

Responsive Advertisement

‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ தேர்வில் காப்பி அடித்த 20 பேர் பிடிபட்டனர்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 5-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று ஆங்கில தொடர்பியல், இந்திய கலாசாரம், கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்), உயிரி வேதியியல் மற்றும் மேம்பட்ட தமிழ் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது.

இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் மட்டும் காப்பி அடித்ததாக 20 மாணவர்கள் பிடிப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நேற்று நடைபெற்ற கணினி அறிவியல் தேர்வில் மட்டும் தஞ்சாவூரில் ஒருவர், கடலூரில் 4 பேர், திருவண்ணாமலையில் 2 பேர் மற்றும் வேலூரில் 13 பேர் என மொத்தம் 20 பள்ளி மாணவர்கள் காப்பி அடித்ததாக பிடிபட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement