நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணித தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எஸ்.ஏ.அபிநயவேம்பா(தேனி மேலப்பேட்டை இந்து நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் மிக எளிமையாக இருந்தது. கட்டாய கேள்வியில் கேட்கப்பட்ட 2 வினாக்களும் எளிதாக இருந்தது. 5 மார்க்கில் 34வது வினாவில் புத்தகத்தில் உள்ள கேள்வியை நம்பரை மட்டும் மாற்றி கேட்டு இருந்தது மிக எளிமையாக இருந்தது.10 மார்க் 'சாமண்டரி' கணக்கில் முக்கோணத்தின் குத்துக்கோடு, தொடுகோடு என இரண்டு கேள்விகளும் எளிமையாக இருந்தது. கிராப்ட் கணக்கில் 'டைரக்ட் வேரியேஷன்' கேட்கப்பட்டது எளிமையாக இருந்ததால் கணக்கில் 100க்கு 100 எளிதாக பெறலாம்.
ஆர்.வெங்கடேஷ்வரன்(தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி): ஒரு மார்க், 5 மார்க் கேள்விகள் வகுப்பறையில் அடிக்கடி செய்து பார்த்த கேள்விகளே வந்தது. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் பலவும் தேர்வில் வந்தது. புத்தகத்தில் உள்ள மாதிரி வினாக்கள் போலவே தேர்விலும் கேட்கப்பட்டிருந்தது. ஏற்கனவே மாதிரி வினாக்கள் வகுப்பில் அடிக்கடி எழுதி பார்த்ததால் தேர்வில் எளிமையாக இருந்தது. கட்டாய கேள்விகளிலும் குழப்பம் இன்றி இருந்ததால் சாதாரணமாக படிக்கும் மாணவர்கள் கூட 70 மார்க் பெற முடியும். அதிகமானோர் சென்டம் எடுக்க வாய்ப்பு ஏற்படும்.
தென்கரை முத்துப்பிள்ளை, தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, வேடர்புளியங்குளம், மதுரை: ஒரு மதிப்பெண் பகுதி 15 வினாக்களும் 'புக்பேக்'கில் இடம் பெற்றவை. எளிதாக இருந்தன. 2 மதிப்பெண் பகுதியில்30வது வினா மற்றும் ஐந்து மதிப்பெண் பகுதியில் 45வது வினாக்கள் கிராமப்புற மாணவர்களுக்கு கடினமானதாக இருக்கும். ஐந்து மதிப்பெண் பகுதியில் 38வது வினா கட்டாய வினா. புத்தகத்தில் இடம்பெறாத 'சாய்சதுரம்' பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எதிர்பார்த்த பிதாகரஸ், இருசம வெட்டி தேற்றங்கள் இடம்பெறவில்லை. சராசரி மாணவர்களும் 80 மதிப்பெண் எளிதில் பெறலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை