ஆசிரியர் தேர்வு வாரிய (டிஆர்பி) செயலருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இம்மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் பொதுப்பிரிவில் இடம் பெற்றிருந்தார். அதில் 2 பணியிடங்கள் இருந்தன. அதில் ஒன்று காது கேளாதவருக்கும் மற்றொன்று பெண்களுக்காகவும் ஒதுக்கப்பட்டன. எனவேதான் மனுதாரர் தேர்வு செய்யப்படவில்லை என வாரியச் செயலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அதுகுறித்து விளம்பர அறிவிப்பில் குறிப்பிடவில்லை என்று கூறிய நீதிமன்றம், வாரியச் செயலருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்தபோது மனுதாரருக்கு பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அபராதம் விதித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு, தேர்வு வாரியச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் காதுகேளாதவருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனவே அது அறிவிப்பில் இடம் பெறவில்லை. இதை மனுவில் குறிப்பிட்டு இருந்தபோதும், நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் அபராதம் விதித்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த தகவலை கவனிக்காததால், முந்தைய உத்தரவில் தவறு ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டு ரூ.10ஆயிரம் அபராதம் விதித்ததை ரத்து செய்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை