கோவை மாவட்டம், முத்துக்கவுண்டனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மரத்தடியில் பிளஸ் 2 வகுப்பு நடக்கும் அவலத்தை கண்டு வருந்திய முன்னாள் மாணவர்கள், 3 லட்சம் ரூபாய் செலவில், மூன்று வகுப்பறைகளை கட்டிக்கொடுத்துள்ளனர்.
ஆசிரியர்களின் சீரிய கற்பிக்கும் முறையால், பள்ளியின் தேர்ச்சி வீதம் படிப்படியாக உயர்ந்து, கடந்த ஆண்டு, 90 சதவீதமாக அதிகரித்தது. அதே ஆண்டு பள்ளி யின் தரம் உயர்த்தப்பட்டு, மேல்நிலைப் பள்ளியாக அங்கீகரிக்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்பு துவங்கிய நிலையில், பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, பிளஸ் 2 வகுப்புகள் முடியும் நிலையி லும், கூடுதல் கட்டடம் கட்டப்படவில்லை.
பாழடைந்த...:
இச்சூழலில், துவக்க காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் வலுவிழந்து, பராமரிப்பு இன்றி, பாழடைந்த பங்களாவாக காட்சி அளித்தது. கட்டட பற்றாக்குறையால், பிளஸ் 2 வகுப்புகள் மரத்தடியில் செயல்பட்டன. மழை காலத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் அவதிக்குள்ளாயினர். இதையறிந்து, இப்பள்ளியில் படித்த, முன்னாள் மாணவர்கள், உதவ முன் வந்தனர். ஆடிட்டராக பணியாற்றும் ஞானசுந்தரம், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி பேராசிரியர் கனகராஜ், தமிழக அரசின் கைத்தறித்துறை உதவி இயக்குனர் முத்துச்சாமி, விவசாயி சிவராஜ் உள்ளிட்ட, முன்னாள் மாணவர்கள், 250 பேர் ஒன்றிணைந்து, ? லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். இதை பயன்படுத்தி, கடந்த, 1970ல் கட்டப்பட்டு, பழுதடைந்து, பயன்பாடற்ற நிலையில் இருந்த கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மூன்று வகுப்பறைகள் உள்ளன. தற்போது மழை, வெயிலில் வாடும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளதுடன், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயிலவும் வழி கிடைத்துள்ளது. முன்னாள் மாணவர்களின் முயற்சியை அறிந்த தனியார் நிறுவனம் ஒன்று, இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டிக்கொடுக்கவும் முன்வந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை