தமிழகத்தில் வரும் 5ம் தேதி துவங்கவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில், கடலூர் மாவட்டத்தில் வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட 2,322 மாணவியர் கூடுதலாக தேர்வு எழுத உள்ளனர்.
ஆனால், மாவட்டத்தின் மக்கள் தொகை
(கடந்த 2011ம் ஆண்டின் கணக்கின்படி) 26 லட்சத்து 5,914 பேர். அதில், ஆண்கள் 13 லட்சத்து 11 ஆயிரத்து 697 பேர். பெண்கள் 12 லட்சத்து 94 ஆயிரத்து 217 பேர். அதாவது ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்களும், குழந்தைகளில் 1000 ஆணிற்கு 896 பெண்களே உள்ளன. மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்தும், பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதே வேளையில், பள்ளி சேர்க்கை மற்றும் பொதுத் தேர்வுகளில் பங்கேற்பதிலும் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உள்ளனர். இது ஆண்கள் மத்தியில் கல்வி கற்பதில் ஆர்வம் குறைந்து, பல்வேறு வழிகளில் தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொள்வதையே காட்டுகிறது. இதன் காரணமாகவே, மிக பழமையான கடலூர் மாவட்டம், இன்னமும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளது. இந்த நிலையை மாற்றிட, அனைவரும் கல்வி கற்பதை உறுதி செய்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை