'நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில், மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும்' என்ற உத்தரவில் இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பயமுறுத்தும் பனிக்காலம் : நடப்பாண்டிற்கான, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச், 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச், 19ம் தேதியும் துவங்க உள்ளன.நீலகிரி மாவட்டத்தில், நவம்பர் மாதம் துவங்கும் பனிக்காலம், பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை நீடிப்பது வழக்கம். இந்தாண்டு, 'மார்ச் மாதம் வரை பனி நீடிக்கும்' என, எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நீலகிரியில், கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள் 'காப்பி' அடித்து சிக்கி கொள்ளும் சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. எனவே, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாணவர்கள் காலணி அணிந்து தேர்வு எழுத அனுமதி அளிக்கலாம்' என, தேர்வுகள் இயக்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளோம்' என்றனர்.
பெற்றோர் தரப்பில் கூறுகையில், 'வகுப்பறைகளில், மூன்று மணி நேரம் வெறுங்கால்களை தரையில் வைத்து, தேர்வெழுதுவதால், சளி, காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. குளிரில் நடுங்கும் கால்களுடன் முழு கவனத்துடன் தேர்வு எழுத முடியாது. எனவே, நீலகிரி மாவட்ட மாணவர்கள் காலணி அணிந்து, தேர்வு எழுத அரசு அனுமதிக்க வேண்டும்' என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை