Ad Code

Responsive Advertisement

மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க புதிய விதிமுறைகள்

மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து பல்வேறு விதிமுறைகளை நிர்ணயித்து, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுரை வழங்கி உள்ளது.

மாணவிகள் பள்ளிக் கூடத்துக்கு வரும் போதும், வீட்டுக்குச் செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாகச் செல்ல வேண்டும் என்று அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் கடிதம் அனுப்பி உள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போது தனித்தனியாக செல்லாமல், சேர்ந்து குழுவாக பாதுகாப்பாகச் செல்லவேண்டும். இதுகுறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்க வேண்டும்.

பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆட்டோ ரிக்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் தக்க அறிவுரை வழங்க வேண்டும்.

பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது. மின்சார வயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. மாணவ, மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல நெறிமுறைகளையும் பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவ, மாணவிகளுக்கு உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும்போதும், வீட்டுக்குச் செல்லும்போதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement