Ad Code

Responsive Advertisement

புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள் தலைமையில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் வழிபாடு நடைபெற்றது

நேற்று  18/01/2015  தேதி, மாண்புமிகு  மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் இறை வழிபாடு நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள காட்டு பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் மாண்புமிகு  கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் மேயர்   உயர்திரு. ராஜன் செல்லப்பா அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் துணை மேயர்   உயர்திரு. திரவியம் அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு   மாண்புமிகு  மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக வேண்டுமென  மனமுருக வேண்டினர். வழிபாட்டில்  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருக  பாண்டியன்,  மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள், மாநில இணைப்பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார். ஈ.வே.ரா. அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜான் அவர்கள், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு.செல்வபூபதி அவர்கள்,சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள், மாநிலத்  துணைத் தலைவர் திரு.சிவாஜி அவர்கள்,  மற்றும்  ஆசிரிய ஆசிரியைகள் பலர் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அனைத்து  மதத்தினரும் கலந்துகொண்ட சர்வமத வழிபாடாக இது அமைந்தது. மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் வழிபாட்டு ஏற்பாடுகளை செய்தனர். வழிபாட்டிற்கு பின் பேசிய  மாண்புமிகு  கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள் விரைவில்  புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் பொற்காலம்  வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.     










Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement