நேற்று 18/01/2015 தேதி, மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக வேண்டி "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் சார்பில் இறை வழிபாடு நடைபெற்றது. மதுரை மாநகரில் உள்ள காட்டு பிள்ளையார் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் மேயர் உயர்திரு. ராஜன் செல்லப்பா அவர்கள், வணக்கத்திற்குரிய மதுரை மாநகர் துணை மேயர் உயர்திரு. திரவியம் அவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு மாண்புமிகு மக்களின் முதல்வர் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக வேண்டுமென மனமுருக வேண்டினர். வழிபாட்டில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள், மாநில இணைப்பொதுச் செயலாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார். ஈ.வே.ரா. அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு.ஜான் அவர்கள், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு.செல்வபூபதி அவர்கள்,சிறப்பு ஆலோசகர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் திரு.சிவாஜி அவர்கள், மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் பலர் கலந்துக்கொண்டு வழிபட்டனர். அனைத்து மதத்தினரும் கலந்துகொண்ட சர்வமத வழிபாடாக இது அமைந்தது. மதுரை மாவட்ட பேரவை நிர்வாகிகள் வழிபாட்டு ஏற்பாடுகளை செய்தனர். வழிபாட்டிற்கு பின் பேசிய மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் உயர்திரு.செல்லூர் ராஜு அவர்கள் விரைவில் புரட்சித் தலைவி "அம்மா" அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் பொற்காலம் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை