'பள்ளி மாணவிகள் பள்ளிக்கு வருவதும், வீடுகளுக்கு செல்லும் போதும் தனியாக செல்வதை தவிர்த்து, குழுவாக, பாதுகாப்பாக செல்லவேண்டும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கண்காணிப்பை அதிகரிக்க, அனைத்து தலைமையாசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், டெங்கு, சிக்-குன்-குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் உரிய அறிவுரை வழங்கவேண்டும். பள்ளி வளாகத்தில் மாண வர்களுக்கு எட்டக்கூடிய வகையில், மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது. மின்சார ஒயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது என பல்வேறு, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி கூறியதாவது: தலைமையாசிரியர் கூட் டத்தில், மாணவிகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்துவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தையும், நெறிமுறைகளையும் பின்பற்றவும், உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிசெய்யும் படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகள் பள்ளிக்கு வந்து, திரும்பும் பொழுது பாதுகாப்பு அதிகப்படுத்த கூறப்பட்டுள்ளது. ஒரு பகுதியிலிருந்து வரும் மாணவ, மாணவிகளை குழுவாக ஒருங்கிணைத்து வீடுகளுக்கு அனுப்புகின்றோம்.
பெற்றோர்கள் தவிர, அறிமுகம் இல்லாத நபர்களுடன் மாணவர்களை அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த, அனைத்து தகவல்களும், பெற்றோர் கூட்டத்தில் அறிவுறுத்தப்படவுள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர் ஒத்துழைப்பும் அவசியம்.இவ்வாறு, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை