தகவல் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவருக்கு தாமதமாக பதில் அளித்த பத்தமடை பேரூராட்சி செயல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தது.
நெல்லை மாவட்டம், பத்தமடை பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் சுப்புலெட்சுமி. கரிசூழ்ந்தமங்கலத்தைச் சேர்ந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பத்தமடை பேரூராட்சியில் அஜென்டாவில் இடம்பெறாமல் எந்தெந்த தீர்மானங்கள் எந்தெந்த தேதியில் விவாதிக்கப்பட்டது, தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட 16 இனங்களில் தகவல் கேட்டு விண்ணப்பித்தார்.
இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் சுமார் 8 மாதம் கழித்து தாமதமாக தகவல் வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து, கணேசனிடம் ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலித்து உரிய அரசு கணக்கில் செலுத்துமாறு டவுன் பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனருக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதையடுத்து கணேசன், இனிமேல் காலம் தாழ்த்தாமல் தகவல்களை வழங்குவேன் என்றும் தற்போது விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யுமாறும் மன்னிப்பு கேட்டு தகவல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை தகவல் ஆணையம் நிராகரித்து விட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை