'மாணவியர் தனியாக செல்வதையும்; பேருந்து நிறுத்தங்களில் தனியாக நிற்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்; குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
* மாணவர்கள், பேருந்து படியில் பயணித்தல்; ஆட்டோவில் அதிக எண்ணிக்கையில் பயணித்தல் தொடர்கிறது. இதை தவிர்க்க, மாணவர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் கட்டட பராமரிப்பு; புதிய கட்டட பணிகள் நடக்கும் இடங்களுக்கு, மாணவர்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.
* பள்ளியில், இருபால் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, போதிய கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும்.
* பருவகால மாற்றங்களால் ஏற்படும் 'டெங்கு, சிக்குன் குனியா' காய்ச்சல்களில் இருந்து பாதுகாக்க, தேவையான அறிவுரைகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் கிணறுகள், நீர் தொட்டிகள், இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள், உயரழுத்த மின் கம்பங்களில், அறுந்து தொங்கும் மின்ஒயர்கள் அகற்றப்பட வேண்டும்.
* மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் போதும், பள்ளி வளாகத்திற்கு உள்ளும், அவர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பெண் குழந்தைகள், எக்காரணம் கொண்டும் தனியாக செல்வது மற்றும் பேருந்து நிறுத்தங்களில் தனியாக நிற்பதும், அறவே தவிர்க்கப்பட வேண்டும். மாணவ, மாணவியர் குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை