கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 6-ஆம் வகுப்பு முதல் பள்ளியில் இடைநிறுத்தம் செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற, பெறாதவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டோர் கலந்து கொள்ளலாம். இதில் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.
எனவே, வேலைவாய்ப்பற்றோர், இன்டிமேட் பேஷன் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் அசல், நகலுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் புகைப்படமும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை