Ad Code

Responsive Advertisement

நாளை கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம்

 கூடுவாஞ்சேரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கூடுவாஞ்சேரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், 6-ஆம் வகுப்பு முதல் பள்ளியில் இடைநிறுத்தம் செய்தவர்கள், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற, பெறாதவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்டோர் கலந்து கொள்ளலாம். இதில் இரு பாலரும் கலந்து கொள்ளலாம்.

எனவே, வேலைவாய்ப்பற்றோர், இன்டிமேட் பேஷன் இந்தியா என்ற தனியார் நிறுவனத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ், கல்வி தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றில் அசல், நகலுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் புகைப்படமும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement