Ad Code

Responsive Advertisement

அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் கட்டாயம் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்று வழங்கவேண்டும் அது 2015-2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பே கிரேடு முறையை கொண்டு வந்துள்ளது. அது என்ன வென்றால் எஸ் கிரேடு முதல் இ கிரேடு வரை உள்ளது. அதில் யு கிரேடு என்றால் பெயில்.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு இந்தியாவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களிலும் கிரேடு முறையை அமல்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

புதிய கிரேடு முறை

அதன்படி கிரேடு ஓ. முதல் கிரேடு பி வரை அமல்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கிரேடு ஓ- மதிப்பெண் 90.1 முதல் 100 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு ஏ பிளஸ் என்பது எக்ஸலன்ட். இது 80.1 முதல் 90 வரை உள்ள மதிப்பெண் ஆகும். அதைத்தொடர்ந்து கிரேடு ஏ- மிகவும் நல்ல மதிப்பெண் அதாவது 70.1 முதல் 80 மதிப்பெண் வரை ஆகும்.

கிரேடு பி பிளஸ் என்பது நல்ல மதிப்பெண் அதாவது 60.1 முதல் 70 மதிப்பெண் வரை ஆகும். பி கிரேடு என்றால் சராசரி மதிப்பெண்ணுக்கு அதிகமாக அதாவது 50.1 மதிப்பெண் முதல் 60 மதிப்பெண்வரை. கிரேடு சி என்பது சராசரி மதிப்பெண் அதாவது 50 முதல் 55 மதிப்பெண் வரை ஆகும். கிரேடு பாஸ் என்பது: தேர்ச்சி மதிப்பெண் கொண்டது. அதாவது 40 மதிப்பெண முதல் 50 மதிப்பெண் வரை உள்ளது ஆகும்.

இவ்வாறு கிரேடு முறை அமல்படுத்தப்பட உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement