முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் படிப்பது போல், 1,330 திருக்குறளையும், 2ம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுதி, சாதனை படைத்துள்ளார்.கோவை மாவட்டம், போத்தனூர் செட்டிபாளையத்தை சேர்ந்த டெம்போ டிரைவர் ரமேஷ் - நந்தினியின் மகள் ஜனனி. 2ம் வகுப்பு படிக்கும், 6 வயது சிறுமியான இவர், முகம் பார்க்கும் கண்ணாடியில் படிப்பதுபோல், எழுத்துகளை எழுதிப் பழகினார்.
இந்நிலையில், பெற்றோர் வாங்கிக் கொடுத்த, 21.5 மீ., கதர் துணியில், 1,330 திருக்குறளையும், முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியால் மட்டுமே படிக்கும் வகையில், 80 நாளில் எழுதி, சாதனை படைத்துள்ளார்.'எதிர்காலத்தில் தமிழாசிரியை ஆக வருவேன்' என, கூறிய மாணவியை, போலீஸ் கமிஷனர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை