மதுரையில் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்கும் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) அலுவலக வளாகத்தில் 'ஒதுங்குவதற்கு' இடமில்லாமல் ஆசிரியர்கள்-
ஊழியர்கள் புலம்புகின்றனர்.மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலகத்திற்குள் மாவட்ட கல்வி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மண்டல தணிக்கை என பல அலுவலகங்கள் செயல்படுகின்றன.இங்கு 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர். இதுதவிர பணி நிமித்தமாக ஆசிரியர்கள், அலுவலர்கள், மக்கள் என தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சி.இ.ஓ., அலுவலகம் பின் பகுதியில் உள்ள சிறிய கழிப்பறையை தான் முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர் பயன்படுத்துகின்றனர்.மெட்ரிக் மற்றும் எஸ்.எஸ்.ஏ., அலுவலகங்களுக்குள் மட்டும் சிறிய கழிப்பறை உள்ளன. ஆனால் இந்த அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக வந்து செல்வோருக்கு அவசரத்திற்கு 'ஒதுங்க' ஒரு கழிப்பறை வசதி கூட இல்லை.அரசு பள்ளிகளுக்குகெல்லாம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கும் எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட அலுவலகங்கள் இங்கு செயல்பட்டும் கழிப்பறைகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.இத்திட்டங்கள் சார்பில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு மாதந்தோறும் பல்வேறு பயிற்சி முகாம்கள் இங்கு நடக்கின்றன. பயிற்சிக்கு வந்துசெல்லும் ஆசிரியர்களின் நிலை பரிதாபமாக மாறிவருகிறது. எனவே இந்த அலுவலகத்தில் கழிப்பறை வசதி மேற்கொள்ள அதிகாரிகள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை