உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான, நிர்வாகப் பயிற்சி, சென்னையில் அளிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி இயக்கம் கட்டுப்பாட்டில் பணிபுரியும், 836 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, நிர்வாகப் பயிற்சி அளிக்க, அரசு உத்தரவிட்டது.
அதன்படி, முதல் கட்டமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 73 பேருக்கு, சென்னையில், பயிற்சி வகுப்பு நடந்தது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி, 32 தலைப்புகள் கொண்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான கையேடை வெளியிட்டார். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆங்கில உச்சரிப்பை, சரியான முறையில் கற்க வேண்டும் என்பதற்காக, தயார் செய்யப்பட்டுள்ள குறுந்தகதடையும், அமைச்சர் வெளியிட்டார். பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி இயக்க, மாநில திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வரவேற்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை