மாணவர்கள் தங்களது தனித் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் கேட்டு கொண்டார். சென்னை சோழிங்கநல்லூர் சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் பொருளாதார உதவியோடு
அப்போது அவர் பேசியதாவது: மாணவர்கள் பாடங்களோடு தங்களது தனித்தன்மை எது எனக் கண்டறிந்து அதில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
மாணவர்களது திறமையை வெளிப்படுத்துவதில் பேராசிரியர்களின் பணி முக்கியமானது.
பேராசிரியர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அப்துல் கலாம்.
நிகழ்ச்சியில், சத்தியபாமா பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், நிர்வாக இயக்குநர்கள் மரிய ஜீனா ஜான்சன், மரிய ஜீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை