திருவள்ளூர் மாவட்டத்தில் 2014-15-ஆம் ஆண்டுக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் பரிந்துரை பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என கணினிப் பட்டதாரிகள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவின் விவரம்: 2014- 15-ஆம் ஆண்டுக்கான கணினிப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 250 பேரில் 130 பேர் இதரப் பட்டங்களை முடித்தவர்கள். கணினிப் பட்டதாரிகள் ஏராளமானோர் இருக்கும்போது இதர பாடப்பிரிவுகளை முடித்த பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து இந்தப் பட்டியலில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை