அரசு செவிலியர் பயிற்சி ஆசிரியர் சங்கத்துக்கான தனி இணையதளம் மதுரையில் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இணையதளத்தை சென்னை ஸ்டான்லி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் பானுமதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் கோமலி, மகப்பேறு மருத்துவமனை செவிலிய பயிற்சிப் பள்ளி முதல்வர் நானாவதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் சங்கச் செயலர் என்.பாலசுப்பிரமணியன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது அவர் கூறுகையில், செவிலியர் பிரிவுக்காக அரசு கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் (செவிலியர்) நியமிக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இணையதள செயல்பாடு இருக்கும் என்றார்.
மதுரை மருத்துவக் கல்லூரி செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் மகேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு அரசு செவிலியர் பயற்சிப் பள்ளி ஆசிரியர் சங்கத் தலைவர் என்.தங்கதுரை தலைமை வகித்தார். துணைச் செயலர் ஜி.கற்பகம் நன்றி கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை