இந்த கொடூர சம்பவத்தை பல்வேறு நாடுகளும் கண்டித்து உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்து இருக்கிறார்.
பாகிஸ்தானை போன்று இந்தியாவிலும் கல்வி நிறுவனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், டெல்லியில் வருகிற ஜனவரி 26–ந் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
எனவே இந்த சூழ்நிலையில் சிமி, லஸ்கர்–இ–தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள உளவுத்துறை, மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா சிறையில் இருந்து சமீபத்தில் சில தீவிரவாதிகள் தப்பிச் சென்றதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இது குறித்து நேற்று பாராளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்திய தமிழக டி.ஜி.பி. அசோக்குமார், பள்ளிக்கூடங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் உத்தரவிட்டார். பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடக்கும் போது போலீஸ் ரோந்துப் பணியை தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
இதேபோல் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜும் உயர் அதிகாரிகளுடன், பள்ளிக்கூட குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ரோந்து செல்வதை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் கேட்டுக்கொண்டார்.
போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் சமீபத்தில் பள்ளிக்கூட முதல்வர்களின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியதும், அப்போது பள்ளிக்கூடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துமாறும், காவலாளிகளை நியமிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதும் நினைவிருக்கலாம்.
எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னை நகரில் பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நகருக்குள் வரும் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை