Ad Code

Responsive Advertisement

பெற்றோரிடம் ஆசிரியை புகார் பள்ளி எதிரில் தீக்குளித்து 7ம் வகுப்பு மாணவி சாவு

புதுக்கோட்டை அருகே உள்ள அந்தோணியார்புரம் வேளாங்கண்ணி தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி, கூலி தொழிலாளி. இவரது மனைவி  அந்தோணியம்மாள். இவர்களுக்கு 3 மகன், 2 மகள். கடைசி மகள் அன்னப்பழம்(12), அங்குள்ள நடுநிலை பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தாள்.
நன்றாக படிக்கும்  மாணவி, கடந்த 10 நாட்களாக சரியாக படிக்கவில்லை. இதனால், வகுப்பு ஆசிரியை பெற்றோரை வரவழைத்து புகார் தெரிவித்துள்ளார். பெற்றோரும் மகளிடம் நன்கு  படிக்குமாறு அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல அன்னப்பழம் வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டாள். ஆனால், பள்ளிக்குள் செல்லாமல்,  எதிரே புதிதாக கட்டப்படும் கட்டிடத்தின் பின்புறம் சென்று தான் பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலிலும், தலையிலும் ஊற்றி  தீவைத்து கொண்டாள். இதில், உடல் கருகி அதே இடத்தில் இறந்தாள். இதுகுறித்து புதுக் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement