வானவில் பண்பாட்டு மையம் சார்பில், 21-ஆம் ஆண்டு பாரதி திருவிழா டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, காலை 10.15 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மறைந்த தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின் உருவப் படத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் திறந்து வைக்கிறார்.
பின்னர், காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாரதியாருக்கு சமர்ப்பித்த சால்வை, பொற்பை ஆகியவற்றை ரா.பா.சாரதிக்கு வழங்குகிறார் தஞ்சை தமிழ்ப் பல்கழைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன்.
டிசம்பர் 13-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழறிஞர் டி.என். ராமச்சந்திரனுக்கு பாரதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குகிறார்.
இதேபோன்று கலந்துரையாடல், சிறப்புரை, நடன நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் டிசம்பர் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடபெறும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை