முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான விண்ணப்பம், வரும் 10ம் தேதி முதல் நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அரசு மேனிலைப் பள்ளிகளில் 2013-14 மற்றும் 2014- 15ம் ஆண்டுகளில் காலியாக உள்ள 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில், 10ம் தேதி முதல் வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வு 2013-14 மற்றும் 2014-15ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரும் 10ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. நந்தனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 26ம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை