AFTER THE STORM!
AFTER THE STORM! எட்டாம் வகுப்பு, ‘AFTER THE STORM’ பாடத்துக்காக, காடுகளை அழிப்பதால் ஏற்படும் தீமைகளையும் அதை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியும் ஒரு செயல்பாடு செய்தோம். மாணவர்களுக்கு, தலையில் கிரீடம் போன்ற ஒன்றை சார்ட் அட்டையில் செய்து சூட்டினோம். ஒவ்வொரு கிரீடமும் ஒவ்வொரு மரத்தைக் குறிப்பதாக அமைத்துக்கொண்டோம். மரங்கள், சந்தோஷமாகத் தன் கிளைகளை அசைத்துப் பாடுவதுபோல மாணவர்கள் தங்கள் கைகளை அசைத்து ஆடினர். அப்போது, அங்கு வந்த கோடரிக்காரர்களைப் பார்த்து அச்சப்பட்டு, மரங்கள் தங்களுக்குள் பேசுவது போல, ஆங்கிலத்தில் பேசிக்கொண்டனர். பிறகு, கோடரிக்காரர்களிடம் மரங்களை வெட்டாமல் விட்டும்படி கேட்டார்கள். ஆனால், கோடரிக்காரர்கள் ஒரு மரத்தை வெட்டினார்கள். அது, அழுதுகொண்டே வீழ்வது போல நடித்தனர். இந்த நடிப்புச் செயல்பாட்டின் மூலம், மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அறிவதோடு, ஆங்கில உரையாடலை வளர்த்துக்கொண்டனர். இதுபோல நீங்களும் செய்யலாம். மாணவர்களின் ஆர்வம், ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றைக் கொண்டு மதிப்பீடு அளிக்கலாம்.
- தி.ஆனந்த், ஊ.ஒ.ந.நி.பள்ளி,.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை