படிக்க வேண்டும் என்று நினைத்த உடன், முதலில் விட வேண்டியது உங்கள் கூச்சத்தை. எழுத்தைக் கூட்டிப் படிக்க வெட்கப்படத் தேவை இல்லை. உங்கள் பாடப் புத்தகத்தைத் தவிர, வண்ண வண்ணப் படங்கள் கொண்ட புத்தகங்களைப் பாருங்கள். பார்க்கப் பார்க்கப் புத்தகங்கள் உங்களை ஈர்க்கும். சிறுவர் புத்தகங்களில் வரும் 'ஜோக்ஸ்' பகுதியைப் படியுங்கள். சிரித்து மகிழும்போது, புத்தகத்தின் மீது ஆர்வம் வரும்.
வகுப்பில் வார்த்தைகளை வைத்து, 'மெமரி கேம்' விளையாடலாம். வரிசையில் ஒருவர், ஒரு வார்த்தையைச் சொல்லி, அதன் ஸ்பெல்லிங் சொல்லவேண்டும். அடுத்தவர், முதல் வார்த்தையுடன் தன் வார்த்தையையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். இப்படியே வகுப்பில் உள்ளவர்கள் அனைவரும் சொல்ல, அந்த மாணவனைப் பார்க்கும்போது, அவன் சொன்ன வார்த்தையும் அதன் ஸ்பெல்லிங்கும் ஞாபகம் வரும்.
மறுநாள், இரண்டாவது வார்த்தை. இந்த முறையில் வார்த்தைகளும் பழகும், ஞாபகசக்தியும் வளரும். தொலைக்காட்சி பார்க்கும்போது, விளம்பரங்களைப் படிக்கவும் அதன் உச்சரிப்பைக் கவனித்து, பார்த்த விளம்பரத்தின் ஸ்பெல்லிங்கை எழுதிப்பாருங்கள். இப்படியாக செய்து வாசிப்பு திறனை மேம்படுத்தினால் தேர்வு சமயத்தில் எளிதாக மதிப்பெண்களை குவிக்க முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை