ஊட்டி ஜே.எஸ்.எஸ்.சி. பார்மசி அரங்கில் ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., கே.ஆர்.அர்ஜூனன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் சங்கர் பேசும் போது கூறியதாவது:–
மாணவர்களை சிறந்த அறிவாளியாகவும், அன்பு, விடா முயற்சி, ஒழுக்கம் கொண்ட நல்ல மனிதர்களாக ஆசிரியர்கள் உருவாக்குகின்றனர். இதனால் தான் ஆசிரியர்களின் பணி புனிதமானது என்று அழைக்கப்படுகிறது. ஒரு மாணவனிடம் சிறு வயதில் கல்வி கற்பித்த ஆசிரியர் யார் என்று கேட்டால், அவர்களது பெயர்களை மறக்காமல் சொல்வார்கள்.
கடந்த 2013–14–ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நீலகிரி மாவட்டம் 92 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 14–வது இடம் பிடித்து உள்ளது. பிளஸ்–2 தேர்வில் 84.05 சதவீதம் தேர்ச்சி பெற்று 24–வது இடத்தை பெற்று உள்ளது.
வரும் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொது தேர்வுகளில் குறைந்தது 100 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி விகிதங்களில் தமிழக அளவில் நீலகிரி மாவட்டம் முதல் 10 இடங்களை பெற ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். இதற்காக மாணவர்களை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, 2013–14–ம் கல்வியாண்டில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் மற்றும் பணி நிறைவு பெற்ற 16 ஆசிரியர்களை பாராட்டி கலெக்டர் சங்கர் பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் தாட்கோ தலைவர் கலைச்செல்வன், மாநில ஆவின் தலைவர் அ.மில்லர், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை