ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., போன்ற அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, மத்திய பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த வயது வரம்பு குறைக்கப்பட்டதா... இல்லையா... என்ற குழப்பம் நீடிக்கிறது. இதனால், தேர்வு எழுத ஆர்வத்துடன் காத்திருக்கும் இளைஞர்களிடம் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உத்தரவு:அதே நேரத்தில், புதிய அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.யு.பி.எஸ்.சி., தேர் வில், 2013ல் புதிதாக திறன் அறியும் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இது, கடினமாக உள்ளதாக எழுந்த கோரிக்கையை ஏற்று, தேர்வு எழுதும் வாய்ப்பு, அனைத்துப் பிரிவினருக்கும் இரண்டு முறை அதிகரித்து, 2014 பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது.
இதுவே, நிர்வாக சீர்திருத்த ஆணையம் தற்போது கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு காரணமாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாலா ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது:
யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில், 70 சதவீதம் பேர், மூன்று முறைக்கு மேல் தேர்வு எழுதியவர்களாகவும், 28 முதல் 30 வயது உடையவர்களாகவுமே இருக்கின்றனர். 15 சதவீதம் பேர் தான், 25 வயதுக்குள் தேர்ச்சி பெறுகின்றனர்.
சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் பயின்றவர்கள் மட்டுமே, குறைந்த வயதில், யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். மற்றவர்கள் முதுகலைப் பட்டம் முடித்தாலும், யு.பி.எஸ்.சி., தேர்வுக்கு தயாராகும்போது, ஆரம்ப கல்வியில் இருந்து தயாராக வேண்டியுள்ளது. நாட்டின் கல்வி முறையும் இப்படித் தான் உள்ளது.இந்நிலையில், வயது வரம்பை குறைப்பது, தேர்வு எழுதும் வாய்ப்பை குறைப்பது போன்றவை, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான வயது வரம்பை குறைக்கக் கூடாது என்பதே பொதுவான கோரிக்கை. ஆனால், இப்பிரச்னை குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரை, எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம்.
எனவே, இத்தேர்வுக்கான வயது வரம்பு குறித்து, மத்திய அரசு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முன் அறிவிப்பு:கல்வியாளர் நெடுஞ்செழியன்: மத்திய அரசின் அறிவிப்பு திடீரென்று வெளியாகி, வரும் ஆண்டிலிருந்தே புதிய நடைமுறை அமலாகும் எனக் கூறியது, அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. யு.பி.எஸ்.சி., தேர்வில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திறன் அறியும் முறையால், தேர்வு மிகக் கடினமாக உள்ளது என புகார் எழுந்தது.
புதிய நடைமுறை:இதையடுத்தே, அனைத் துப் பிரிவினருக்கும், தேர்வு எழுதும் வாய்ப்பை இரண்டு முறை அதிகரித்து, முந்தைய மத்திய அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், அனைத்து சலுகைகளும் பறிக்கப்படுவது போல், வயது, தேர்வு எழுதும் வாய்ப்பை குறைப்பது முறையற்றது. வயது மற்றும் வாய்ப்பு குறித்த புதிய நடைமுறை, இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து அமல்படுத்தப்படும் என, அறிவித்தால், அதற்கு ஏற்ப இளைஞர்கள் தயாராக முடியும்.
இல்லையேல், இத்தேர்வுக்காக தற்போது தயாராகிக் கொண்டிருப்பவர்கள், பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை