10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை எழுதினர். நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் ஆயிரம் பேருக்கு போட்டித் தேர்வு நடத்தி உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்டத் தேர்வு தமிழகம் முழுவதும் 350 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திறனறித் தேர்வு, படிப்புத் திறன் தேர்வு என இரண்டு தாள் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்காக 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககமே வெளியிடலாம். ஆனால், முடிவுகளை வெளியிடுவதற்கு முன் தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சிலின் ஒப்புதல் பெறப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டத் தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சில் சார்பில், இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு கட்டடங்களிலும் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது மாதம் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்பின்போது வழங்கப்படும் உதவித் தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும்.
முதல் கட்டத் தேர்வு தமிழகம் முழுவதும் 350 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திறனறித் தேர்வு, படிப்புத் திறன் தேர்வு என இரண்டு தாள் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுக்காக 1.47 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றுள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககமே வெளியிடலாம். ஆனால், முடிவுகளை வெளியிடுவதற்கு முன் தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சிலின் ஒப்புதல் பெறப்படும். அடுத்த இரண்டு மாதத்தில் இந்த முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் கட்டத் தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி- பயிற்சி கவுன்சில் சார்பில், இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு கட்டடங்களிலும் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது மாதம் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்பின்போது வழங்கப்படும் உதவித் தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை