Ad Code

Responsive Advertisement

இன்ஷுரன்ஸ் பாலிசி… தவிர்க்க வேண்டிய தவறுகள்!


நம்மில் பெரும்பாலானவர்கள் லைஃப் மற்றும்ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்காமல்தவிர்த்துவருவது ஒருபுறம் இருக்க,ஏற்கெனவே எடுத்திருப்பவர்கள் தங்கள்எதிர்கால பாதுகாப்புக்கு எந்த வகையிலும்உறுதி செய்யாத ஏதேதோ பாலிசிகளைஎடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்குக்காரணம், இன்ஷூரன்ஸ் குறித்து தெளிவானபுரிதல் இல்லாததால் செய்யும்தவறுகளால்தான். இன்ஷூரன்ஸ்எடுக்கும்போது நாம் செய்யும் தவறுகளையும்,அதற்கான தீர்வுகளையும் பார்ப்போம்.

வரிச் சலுகை!
நம்மில் பலர் வரிச் சலுகைக்காகஇன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறோம். ஆனால்,இன்ஷூரன்ஸ் என்பது எதிர்காலபாதுகாப்புக்குத்தானே தவிர, வரிச் சலுகைகிடைக்கும் என்பதற்காக அல்ல. இந்தமனநிலையை மக்கள் மாற்றிக்கொள்ளவேண்டும்.

மற்றவர்களின் ஆலோசனை!
பல சமயங்களில் நமக்கு தேவையானஇன்ஷூரன்ஸ் பாலிசியை நாமே முடிவு செய்துஎடுக்காமல், மற்றவர்கள் சொல்வதைக்கேட்டு எடுக்கிறோம். இப்படிசொல்கிறவர்கள் நிதி ஆலோசகர்களாகஇருந்தாலும் பரவாயில்லை. ஆனால்,இன்ஷூரன்ஸ் பற்றி எதுவுமே தெரியாதநண்பர்கள், உறவினர்கள் சொல்வதைக்கேட்டு பாலிசி எடுப்பது மிகவும் தவறு.

குறைந்த பிரீமியம்!
குறைந்த பிரீமியத்தில் கிடைக்கிறதுஎன்பதற்காக எந்த இன்ஷூரன்ஸ்பாலிசியையும் எடுக்கத் தேவையில்லை.தேவை இருந்து, நல்ல பலன்களுடன்குறைந்த பிரீமியத்தில் பாலிசி கிடைத் தால்,அதைத் தாராளமாக வாங்கலாம்.

தெரிந்துகொண்டு கையெழுத்திடுங்கள்!
பாலிசி எடுக்கும்போது படிவத்தை நாமேநிரப்பாமல் கையெழுத்து மட்டும்போட்டுத்தருவது. இதனால் தான் அந்தபாலிசி குறித்த எல்லா விவரங்களும்பாலிசிதாரருக்குத் தெரியாமல் போகிறது.அதேபோல, காப்பீட்டுப் பத்திரத்தில்,சுயதகவல்கள், வாரிசுதாரர் மற்றும்விதிமுறைகளைச் சரிபார்த்து அதன்பிறகுகையெழுத்துப் போடுவதே நல்லது.

குறைந்த காப்பீடு; அதிக பிரீமியம்!
நம்மில் பலர் குறைந்த காப்பீட்டுக்கு அதிகபிரீமியத்தைக் கட்டுவது மாதிரி யானபாலிசியை வைத்திருக்கிறார்கள். காரணம்,பாலிசி எடுக்கும்போது இந்த பாலிசியின்மூலம் எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்,அதற்கான விதிமுறைகளும் நிபந்தனைகளும்என்னென்ன என்பதைத் தெரிந்துகொள்ளத்தவறி விடுகிறோம். குறைந்த பிரீமியத்தில்,அதிக காப்பீடு தரும் டேர்ம் பாலிசி களைத்தேர்வு செய்வதே சரி.

முக்கிய தகவல்களை மறைப்பது!
இன்ஷூரன்ஸ் படிவத்தை நாமே பூர்த்திசெய்தாலும், முக்கியத் தகவல்கள், நோய்கள்,முந்தைய மருத்துவ வரலாறு, வேறுகாப்பீடுகள் பற்றிய தகவல்களைத்தெரிவிக்காமல் விட்டுவிடுகிறோம் அல்லதுமறைத்து விடுகிறோம். இது தவறு. நம்மைபற்றிய எந்த முக்கிய தகவலையும் நாம்மறைக்கவே கூடாது.

முக்கிய மாற்றங்கள்!
முகவரி மாற்றம், வாரிசுதாரர் மாற்றம்,தொடர்புகொள்ளும் தகவல் மாற்றம்நிகழும்போது அதை உடனே காப்பீட்டுநிறுவனத்துக்குத் தெரியப் படுத்த வேண்டும்.ஆனால், இதைச் செய்யாமல்விட்டுவிடுகிறார்கள்.

இன்ஷூரன்ஸ் முதலீடு அல்ல!
சிலர் குழந்தைகள் பெயரில்   இன்ஷூரன்ஸ்பாலிசி எடுத்து, அவர்களின் கல்விச்செலவுக்கும், திருமணச் செலவுக்கும்பயன்படும் என்று நினைக்கிறார்கள். இந்தமனநிலை முற்றிலும் தவறானது. குழந்தையின்கல்வி, திருமணத் தேவை களுக்கு தனியாகமுதலீடு செய்ய வேண்டுமே தவிர,இன்ஷூரன்ஸ் பாலிசி  எடுக்கக் கூடாது. முதலீட்டை யும், இன்ஷூரன்ஸையும்போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது.

ரைடர்கள் முக்கியம்!
முக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி களுக்கு ரைடர்என்று சொல்லப்படுகிற துணை பாலிசிகள்இருக்கும். இந்தத் துணை பாலிசிகள்உருவாக்கப்பட்டதன் நோக்கமே,பாலிசிதாரருக்கு கூடுதல் பயன் தரவேண்டும்என்பதினால்தான். ஆனால், இதற்கு பிரீமியம்தனியாகச் செலுத்த வேண்டுமே என்றுநினைத்து, பலரும் இந்தத் துணைபாலிசிகளை எடுக்காமல் விட்டுவிடுகிறார்கள்.இது பெரிய தவறு. பிரீமியம் கொஞ்சம்அதிகமாகக் கட்டினாலும், இழப்பீடு அதிகம்கிடைப்பதை நாம் கவனிக்கத் தவறக்கூடாது.

எந்தெந்த நோய்களுக்கு கிடைக்கும்?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிஎடுத்துவிட்டால், எல்லாவிதமானநோய்களுக்கும் க்ளைம் கிடைக்கும் என்றுபலரும் நினைக்கிறார்கள். எல்லாநோய்களுக்கும் இதில் க்ளைம் கிடைக்கும்என்று சொல்ல முடியாது. மெடிக்ளைம் பாலிசிஎடுக்கும்போது அந்த பாலிசியில் எந்தநோய்களுக்கு எல்லாம் க்ளைம் கிடைக்கும்,எந்தெந்த நோய்களுக்கு க்ளைம்கிடைக்காது என்பதையும் தெளிவாக கேட்டுத்தெரிந்துகொண்டால், பிற்பாடு ஏமாற்றத்தைத்தவிர்க்கலாம்.

மருத்துவமனை விவரங்களைக் கவனிக்க!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதுமுக்கியமாகக் கவனிக்க வேண்டியது,மருத்துவமனைப் பட்டியல் விவரம். இதைக்கவனிக்காமல் விடுவதால், அவசரநேரங்களில் அருகில் இருக்கும்மருத்துவமனைகளை விட்டுவிட்டு, எங்கோஇருக்கும் மருத்துவமனை களைத் தேர்வுசெய்துவிடுவோம்.

அலுவலகத்தைச் சார்ந்திருக்க வேண்டாம்!
வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஹெல்த்இன்ஷூரன்ஸ் எடுத்திருந்தால், தனியாகஇன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதைத்தவிர்த்துவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறு.எதிர்பாராமல் அந்த நிறுவனத்தில் இருந்துநீக்கப் பட்டாலோ அல்லது நாமாகவிலகினாலோ இன்ஷூரன்ஸ் இல்லாத நிலைஏற்படும். அந்தசமயத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அதற்கான செலவை நம்கையிலிருந்து கட்ட வேண்டிய நிலைஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு போதுமானகவரேஜ் உள்ள பாலிசிகளை  தனியாக எடுத்துக்கொள்வது நலம்.

வேண்டும் காலந்தவறாமை!

சரியான நேரத்தில் பிரீமியம் செலுத்தாமல் விடுவதன் மூலம் சிலர் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை காலாவதியாக விட்டுவிடுகின்றனர். பிரீமியம் கட்டுவதில் காலந்தவறாமை மிக முக்கியம். சிலர் தாங்கள் எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி குடும்பஉறுப்பினர்களிடம் எதுவும் சொல்வ தில்லை. இதுவும் தவறு. எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் அவசியம் எடுத்துச் சொல்ல வேண்டும்.காப்பீட்டுப் பத்திரங்களைப் பாதுகாப்பாகவும்வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன இந்தத் தவறுகளைதவிர்த்தால்தான், இன்ஷூரன்ஸ் மூலம்கிடைக்கும் முழுப் பலனையும் மக்கள்அனுபவிக்க முடியும்.


லைஃப் இன்ஷூரன்ஸ் முதிர்வு தொகைக்கு2% டிடிஎஸ் பிடித்தம்!

நடப்பு 2014-15ம் ஆண்டுக்கான பட்ஜெட்தாக்கலின்போது, வரிச் சலுகைக்குஉட்படாத லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிமுதிர்வு தொகைக்கு 2 சதவிகிதம் டிடிஎஸ்(Tax Deducted at Source) பிடித்தம்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இது, அக்டோபர் 1-ம் தேதிஅமல்படுத்தப்பட்டது. அதாவது, நீங்கள்எடுத்திருக்கும் பாலிசிக்குச் செலுத்தும்ஆண்டு பிரீமியத்தைபோல் 10 மடங்குகவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு இந்த வரிப்பிடித்தம் பொருந்தாது. 10 மடங்குக்கு கீழ்கவரேஜ் இருக்கும் பாலிசிகளுக்கு மட்டும்டிடிஎஸ் 2 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படும்.இதில் பான் கார்டு எண் கொடுக்கவில்லைஎன்றால், 20 சதவிகிதம் டிடிஎஸ் பிடித்தம்செய்யப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement