பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுத் தேர்வு நடத்துவதற்கான தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அதன்படி, அந்தந்த மாவட்ட உள்ளூர் விடுமுறைகள் எந்தெந்த தேதிகளில் வருகிறது, அந்த தேதிகளில் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு பிரச்னை வருமா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர்.
அதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு கல்வித்துறை அதிகாரிகள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். மேலும், உள்ளூர் விடுமுறைகள் குறித்த பட்டியல்களையும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரித்து கொடுத்துள்ளனர். இதை வைத்து தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிப்பார்கள். அதற்கு பிறகு இறுதி அட்டவணைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். நேற்று நடந்த ஆய்வுக் கூட்டத்தில், தேர்வு தொடர்பான விஷயங்கள் தவிர, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள கட்டமைப்பு வசதிகள், உபரி ஆசிரியர்கள், மாணவர்கள் சதவீதம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டதாக பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை