'பல்கலைகளுக்கு தகுதியான ஆசிரியர்களை அளிக்க, முதற்கட்டமாக, 1,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது; இதற்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது' என, பல்கலைக்கழக மானியக் குழு என்ற யு.ஜி.சி.,யின் துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.
41 நிகர்நிலை பல்கலைகள் பிரச்னை குறித்து? நாடு முழுவதும், 41 நிகர்நிலை பல் கலைகள் மீண்டும் ஆய்வு செய்யப்படு கிறது. அப்பல்கலைகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்பது தான் பிரச்னை. இதற்காக தான், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தகுதியான ஆசிரியர்களை உருவாக்கும் புதிய திட்டம் என்ன?
ஆசிரியர்கள் தகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 12வது ஐந்தாண்டு திட்டத்தில், 1,000 தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆந்திர மாநிலம், காக்கி நாடாவில், பல்கலை ஆசிரியர் கல்வி மையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு, முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மனிதவள மேம்பாட்டுத் துறை, 5,000 ஆசிரியர்களை உருவாக்குகிறது. பல்கலைகள், யு.ஜி.சி.,யிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஆசிரியர்களை கேட்டால், நாங்கள் அளிப்போம். அவர்களுக்கான சம்பளம் முழுவதையும்,
யு.ஜி.சி.,யே அளிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கல்வி மையங்கள் மூடப்படும்!
பல்கலைகள் தொலைதூரக் கல்வி பெயரில், ஆங்காங்கே அமைக்கும் கல்வி மையங்களுக்கு, யு.ஜி.சி., கடிவாளம் போட்டுள்ளது.
இதுகுறித்து, அதன் துணைத் தலைவர் தேவராஜ் கூறியதாவது: மாநில அரசின் சட்ட அடிப்படையில், தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், மாநிலத்திற்குள் மட்டுமே செயல்பட முடியும். பார்லி., அனுமதி பெற்றிருந்தால், நாடு முழுவதும் கல்வி மையங்கள் அமைக்கலாம்.
நிகர்நிலை பல்கலைகள், தொலைதூரக் கல்வி மையங்களை துவக்க முடியாது. அனுமதியின்றி துவக்கினால், நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களும் குறிப்பிட்ட பகுதிக்குள் மட்டுமே செயல்பட முடியும். கல்வி மையங்கள் பெயரில் தப்பு நடப்பதை, தடுத்து நிறுத்தி, அவற்றை மூட வேண்டும். நாங்கள், தொலைதூரக் கல்விக்கு எதிரானவர்கள் இல்லை. ஆன் - லைன் படிப்புகளை, அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதே, எங்கள் முடிவு.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை