Ad Code

Responsive Advertisement

விருதுநகர் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு CPS ACCOUNT SLIP பெற்றுக்கொடுத்த நிர்வாகிகளுக்கு பாராட்டு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டாரங்களை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றக்கூடிய பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை " சார்பில் உரிய வழி முறையில் பெருமுயற்சி எடுத்து   CPS ACCOUNT SLIP பெற்றுக் கொடுக்கப்பட்டது. இதனை திறம் பட செய்த  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் விருதுநகர் மாவட்டத் தலைவர் திரு.செல்வ முருகேசன், மாவட்ட செயலாளர் திரு.செல்வ பூபதி, மாவட்ட துணை செயலாளர் திரு.முருகேசன், மாவட்ட பொருளாளர் திரு.ஸ்ரீநிவாசன்  ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாரங்கள் சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் மேற்படி  CPS  ACCOUNT SLIP இல் MISSING CREDIT காணப்படும் ஆசிரியர்களுக்கு அவரவர் கணக்கில் மீண்டும் உரியத்தொகை  கிரெடிட் ஆவதற்கு செய்யவேண்டிய பணிகளை உரிய வழிமுறையில் செய்துக் கொடுத்திட அனைத்து வட்டார கிளை நிர்வாகிகளை   விருதுநகர் மாவட்ட  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. உதவிகளுக்கு மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement