26/10/2014 அன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் மாநில பொதுக்குழு நடைபெற்றது. மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் மற்றும் பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்ட இப்பொதுக்குழுவில் சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொறுப்புகளை மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் வழங்கினார்.
சங்கத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் அவர்களுக்கு உண்டான சங்க பதவிகள் தேடி வரும். அவர்களின் பணி மேலும் சிறக்க "பேரவை" என்றும் உறுதுணையாக இருக்கும். பேரவை செயல்பாடுகளில் ஈடுபாடின்றி இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்களை அப்பதவியில் இருந்து நீக்க தலைமை தயங்காது என்றார். மேலும் பேரவை நிர்வாகிகள் ஆசிரியர்களின் நியமான பிரச்சினைகளை கோரிக்கைகளை தீர்க்க பாடுபடவேண்டும் என்றார்.
சங்கத்தில் உண்மையாக உழைப்பவர்களுக்கு யாராக இருந்தாலும் அவர்களுக்கு உண்டான சங்க பதவிகள் தேடி வரும். அவர்களின் பணி மேலும் சிறக்க "பேரவை" என்றும் உறுதுணையாக இருக்கும். பேரவை செயல்பாடுகளில் ஈடுபாடின்றி இருப்பவர்கள் பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் அவர்களை அப்பதவியில் இருந்து நீக்க தலைமை தயங்காது என்றார். மேலும் பேரவை நிர்வாகிகள் ஆசிரியர்களின் நியமான பிரச்சினைகளை கோரிக்கைகளை தீர்க்க பாடுபடவேண்டும் என்றார்.
முன்னதாக "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் செயல்பாடுகளை பேரவை துவங்கிய நாள் முதல் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்" அவர்கள் இப்பேரவைக்கு அளித்து வந்த ஆதரவையும் அவரின் மறைவுக்குப் பின்னால் "புரட்சித்தலைவி அம்மா" அவர்கள் பேரவைக்கு அரசு அங்கிகாரம் வழங்கியது, பேரவைக்கு அவர் எழுதிய வாழ்த்துக்கடிதம் பற்றி விளக்கினார். பல்வேறு பள்ளிக்கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர்களுடன் தான் பேரவைகாக ஆசிரியர்களுக்காக செய்த கலந்துரையாடல்கள் கலந்துக்கொண்ட கூட்டங்கள் பற்றி விரிவாக விளக்கினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை