ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - என்.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், மாணவியர் அதிகளவில் சேர்வதற்காக, நாடு முழுவதும், 1,000 மாணவியருக்கு, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்), இலவச பயிற்சி அளிக்க உள்ளது.
பிளஸ் 1 மாணவியாக இருந்தால், 10ம் வகுப்பு தேர்வில், 70 சதவீத மதிப்பெண்ணுடன், கணிதம், அறிவியல் பாடங்களில், 80 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 மாணவியராக இருந்தால், 10ம் வகுப்பில், மேற்கண்ட மதிப்பெண்ணுடன், பிளஸ் 1 வகுப்பில், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். நாடு முழுவதும் சேர்க்க உள்ள, 1,000 மாணவியரில், 50 சதவீதம், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவி னருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மதிப்பெண் அடிப்படையில், தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். மாணவியர், சி.பி.எஸ்.இ., இணையதளம் வழியாக, தீதீதீ.ஞிஞண்ஞு.ஞ்ணிதி.ணடிஞி.டிண விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், நேரடியாக விண்ணப்பிக்க, இரு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சாய்பாபா காலனியில் உள்ள அங்கப்பா கல்வி அறக்கட்டளை மேல்நிலைப் பள்ளி மற்றும் மதுரை, நரிமேடு, கேந்திரிய வித்யாலயா பள்ளியிலும், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி தேர்வு செய்யப்படும் மாணவியருக்கு, இணையதளம் வழியாகவும், நேரிடையாகவும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர, பயிற்சி அளிக்கப்படும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை