2014-15 கல்வி ஆண்டில் தொழில்கல்வி முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள், பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.
2014-15 ஆம் கல்வி ஆண்டில் தொழில்கல்வி (பிஇ, எம்பிபிஎஸ், பிபிஏ, எம்பிஏ, எம்சிஏ, பிஎட்) முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரகளின் பிள்ளைகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.
இந்த உதவித் தொகை பெற குறைந்தபட்சக் கல்வி (12ஆம் வகுப்பு, இளங்கலை பட்ட படிப்பு) தகுதியில் 60 விழுக்காடுக்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இந்த உதவித் தொகை புதுதில்லி மைய முப்படை வாரியம் மூலம் வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்கு தகுதியான பெண் பிள்ளைகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ. 27 ஆயிரமும், ஆண் பிள்ளைகளுக்கு தலா ரூ. 24 ஆயிரமும் வழங்கப்படும்.
2014-2015 ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் நவம்பர் 21-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தி சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
இதுகுறித்து மேலும் விவரங்களை அறிய, உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகம், திருவள்ளுர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-27663163 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை