மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மூவகை சான்றுகள் வழங்கும் திட்டத்தில் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாணவர்கள் நலன் கருதி ஆறாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம் மற்றும் வருவாய் சான்றுகள் அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் நலத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிக்கு தேவைப்படும் சான்றிதழ் கேட்டு வருவாய் அலுவலகங்களுக்கு மாணவர்கள் அலைவது குறையும் என கல்வித்துறை தெரிவித்தது. இதன்படி, எம்.பி.சி., டி.என்.சி., எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் கோரி பள்ளிகள் சார்பில் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் அளித்து பல மாதங்களாக கிடைக்காத நிலை நீடிக்கிறது. இதுகுறித்து கேட்டால் ஏதாவது ஒரு சந்தேகத்தை எழுப்பி அதற்கான ஆதாரம் கேட்டு மனுவை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
ஆனால், பள்ளிகள் மூலம் விண்ணப்பித்த அதே மாணவர்கள் சிலர் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் தனியாக விண்ணப்பித்து அதற்கான சான்றிதழ்கள் வாங்கி விடுகின்றனர் என தலைமையாசிரியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் சாமிசத்யமூர்த்தி, பாஸ்கரன் ஆகியோர் கூறியதாவது: தேவைப்படும் மாணவர்கள் விவரம், பெற்றோர் கையொப்பம் உட்பட அனைத்து தகவல்களுடன் விண்ணப்பித்தாலும் சிலர் கிடைக்காத ஆவணங்கள் கேட்டு திருப்பி அனுப்பி, மாணவர்கள், தலைமையாசிரியர்களை சில அதிகாரிகள் பந்தாடுகின்றனர்.
ஒவ்வொரு ஆய்வு கூட்டத்திலும் 'மூவகை சான்றுகள் கேட்டு எத்தனை மாணவர்களுக்கு விண்ணப்பித்துள்ளீர்கள்' என கேட்கும் மாவட்ட அதிகாரிகள், 'கொடுத்த மனுக்களுக்கு எத்தனை சான்றிதழ்கள் வழங்கியுள்ளீர்கள்' என சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்க வேண்டும். அப்போதுதான் சான்றுகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள பிறப்பு சான்றிதழ்களும் வழங்க வேண்டும், என்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை