டிஸ்லெக்சியா' எனும் கற்றல் குறைபாடு, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் உள்ளதா என்பதை கண்டறிந்து, அவர்களுக்கு தனிப்பயிற்சி அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும், கடந்த ஆண்டு, 310 பேர் வரை, இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர், தனியார் பள்ளி மாணவர்கள். இந்த குறைபாடு குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லாததால், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், இந்த சலுகையை பயன்படுத்துவதில்லை என, கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''2014ம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில், தேர்வு எழுதியோரில் ஒருவருக்கும், 'டிஸ்லெக்சியா' பாதிப்பிற்கு தரப்படும் தேர்வு சலுகை அளிக்கப்படவில்லை. மருத்துவ சான்றிதழுடன் எந்த கோரிக்கையும் வரவில்லை,'' என்றார்.
இதுகுறித்து, 'மெட்ராஸ் டிஸ்லெக்சியா அசோசியேஷன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விலாசினி திவாகர் கூறியதாவது: 'இந்த குறைபாட்டை, குழந்தைகளிடம் துவக்கத்திலேயே கண்டறிந்து விட்டால், அவர்களுக்கு பார்த்தல், கேட்டல் உள்ளிட்ட செயல்கள் மூலமாக பயிற்சி அளித்து, புரிந்து கொள்ளும் திறனை அதிகரித்து, குறைபாட்டை போக்க முடியும்.இதுகறித்து, பெற்றோரிடமும், அரசிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. ஐரேப்பிய நாடுகளில், சாரசரியாக, 10 சதவீத குழந்தைகளிடம் இந்த பாதிப்பு உள்ளது.இந்தியாவில் இதற்கான ஆய்வே மேற்கொள்ளப்படவில்லை. இந்த குழந்தைகள், எப்படி புரிந்து கொள்கின்றனரோ அப்படி பயிற்றுவிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு தெரிந்த முறையில், குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க கூடாது. இதுகுறித்து அரசு பள்ளிகளில் விழிப்புணர்வும், பயிற்றுவிக்கும் மையங்களும் தேவை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் என்ன பிரச்னை?
இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இளநிலை ஆசிரியர் ஒருவரை நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள, மருத்துவ கழகம் ஒப்புதல் அளித்தால் தான், தேர்வில் விதிவிலக்கு அளிக்க முடியும். தனியார் பள்ளி மாணவர்கள் விஷயத்தில், அவர்களின் பெற்றோர் வீடுகளில், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, இந்த குறைபாடு தெரியவருகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரை, ஒட்டுமொத்த தேர்ச்சி செய்யப்படுகின்றனர். பெற்றோரும் தனி கவனம் செலுத்த முடிவதில்லை. அதனால், அரசு பள்ளி மாணவர்களிடம், இந்த குறைபாட்டை கண்டுபிடிக்க முடிவதில்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை