Ad Code

Responsive Advertisement

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கிறது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. தொகுதி நான்கில் அடங்கிய இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிகளுக்கு உரித்த காலிப் பணியிடங்களுக்கான, நான்காம், மூன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ம் தேதி வரை, TNPSC அலுவலகத்தில் நடைபெறும்.
கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு வருவோர், தேவையான ஆவணங்களை கட்டாயம் எடுத்துவர வேண்டும். மேலும், தமிழ் வழியில் பயின்ற சலுகையைப் பெற, அதற்கான சான்றுகளைப் பெற்றுவர வேண்டும். இதில் கலந்துகொள்ள தவறுவோருக்கு, கட்டாயம் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது.

இதுகுறித்த அனைத்து விபரங்களும் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement